மழை
வெட்டி யடிக்குது மின்னல், கடல்
வீரத்திரை கொண்டு விண்ணை யிடிக்குது;
கொட்டி யிடிக்குது மேகம்; கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று;
சட்டச்சட சட்டச்சட டட்டா என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்;
எட்டுத் திசையும் இடிய மழை
எங்ஙனம் வந்ததடா, தம்பி வீரா!
-பாரதியார்
No comments:
Post a Comment