இராவணனின் சிவபக்தி!!

            இராவணன்மீது பிரம்மாஸ்திரம் எய்யும் போது, அதன் வெப்பம் தன்னைத் தாக்காமல் இருக்க ஏரி நீருக்குள் மூழ்கி நின்று அஸ்திரத்தை எய்தாராம் ராமர். "டுனுவிலா' என்று அழைக்கப்படும் இப்பகுதி யில் தற்போது ஏரி இல்லை.            இராவணன் ஒரு சிவபக்தன். 3000 ஆண்டு காலத்திற்கு முற்பட்டவர் எனக் கருதப்படும் திருமூலர் இராவணன் வாழ்ந்த இடத்தைச் சிவபூமி என்றும், பிற்பட்ட காலத்தில் அதன் மகிமையை உணர்ந்த சமயகுரவர் காலத்தில் "இராவணன் மேலது நீறு" என்றும் பாடியதில் இருந்து இராவணன் காலத்தில் சிவ பூமியாக இருந்த இலங்கையில் சிவ வழிபாடு கோலோச்சி இருந்தது என்ற உண்மை புலப்படுகின்றது.இராமர் பாலம் உண்மையா, பொய்யா என்பது எனது ஆய்வு அல்ல. ஆனால் ராமரின் வரலாறு 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது புராணவரலாற்று உண்மையாகும். குமரிக்கண்டம் 7 ஆயிரம் ஆண்டளவில் நீரினில் மூழ்குவதற்கு முன் இலங்கை இந்திய நிலப்பரப்புக்கள் ஒன்றாகவே இருந்தன என்பது புவியியல் ரீதியானவரலாற்று உண்மையாகும். அவ்வாறு இருந்திருந்தால் இராமர் ஏன் பாலம்போடவேண்டும் என்ற கேள்வி தேவையற்ற ஒரு விடையமாகும். அவர் நடந்தே இராவணனைத்தேடி வந்திருக்கலாம்.
                இராவணன் மட்டுமல்ல அவனது தாயாரும் சிறந்த சிவபக்தை. வயது முதிர்ந்த காலத்தில் தினமும் வெளியில் சென்று சிவதரிசனம் செய்துவரும் தாயைப்பார்த்து இராவணன் வேதனைப்;பட்டான். தனது தாயாருக்கு எதாவது வழிசெய்ய வேண்டும் என நினைத்தான். அதனால் கைலயத்தைத் தூக்கிக் கொண்டுவந்து தாயார் இருக்கம் இடத்தில் வைக்க முற்பபட்டான். அதன் விளைவாகவே சிவனும், அம்மனும் இருந்த கைலாயமலையைப் புரட்டித் தாயார் முன் கொண்டுவர முயற்சித்ததாக வரலாறுகள் காறுகின்றன.
                இக்காலத்தில் இராவணன் ஒரு சிறந்த விமானம் வைத்திருந்ததாகவும் புராணங்கள் கூறகின்றன. வாரியப்பொல என்ற இடம் இன்றும் இலங்கையில் இருக்கின்றது. அதன் அர்த்தம் "வானோடும் கலம் இறங்கம் இடம்" என்று கூறப்படுகின்றது.
சிவபக்தனாக விளங்கிய இராவணன் கைலாய மலையைப் புரட்டிய புராண வரலாற்றைச் சித்தரிக்கும் ஒரு கதையை அடியார்களுக்கு நினைவபடுத்திச் சிறந்த சைவ வழிபாட்டை மேலோங்க வைப்பதற்காக நயினாதீவு அம்பாள் ஆலயத்தில் 13ம் திருவிழா அன்று அம்பாளை கைலாய வாகனத்தில் வைத்து வீதி உலா வருவார்கள். அந்தக் காட்சி அடியார்களை மெய்சிலிர்க்க வைத்துவிடும். 64 சத்தி பீடங்களில் ஒன்றாகிய புவனேஸ்வரி பீடமே நயினை நாகம்மாள் ஆச்சி செய்யும் புனித நகரமாகும். இதனை வாசிப்பவர்கள் அனைவருக்கும் நயினை நாகபூஷணி அம்பாளின் அருள்கிடைத்து, ஆசிகிடைக்க வேண்டுகின்றேன்.
                இராவணன் கைலையைப் புரட்டுகின்றபோது வாகீசர் என்ற முனிவர் அதனைக்கண்டும் தடுக்காமல் விட்ட குற்றத்திற்காக சிவனிடம் சாபம் பெற்று அப்பர் சுவாமிகளாகப் பூமியில் அவதரித்து பரமன் மீது பண்கனிந்த தேவாரங்களைப்பாடி தனது 81வது வயதில் விமோசனம் பெற்று இறைவனடி சேர்ந்தார் என்கிறது புராண வரலாறு.

No comments:

Post a Comment