மாமல்லபுரம்‬ கடற்கரைச் சிற்பங்கள்!



கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள். மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன. மல்லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா 1984 ல் அறிவித்துள்ளது.


இத்தகைய சிறப்புமிக்க குடைவரைக் கோவில்கள் பல்லவர்களின்
காலத்தில் மன்னன் மகேந்திரவர்மனால் தொடங்கப்பட்டு நரசிம்மவர்மன் முதலான அரசர்களால் படைக்கப்பட்டன.


பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன்பின் உள்நோக்கிக் குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே இந்த வகைக் கோயில்கள். இவற்றின் பின்புறச் சுவரில் கருவறைகளும் அதற்குமுன்பாக அர்த்தமண்டபம், முகமண்டபம் ஆகிய முன்னறைகளும் இருக்கும். கட்டுமானத்தைத் தாங்கும் வகையில் தூண்கள் செதுக்கப்பட்டிருக்கும். இவ்வகைக் கோயில்களில் ஒரு கருவறை அல்லது மூன்று கருவறைகள் அல்லது ஐந்து கருவறைகள்கூட இருக்கலாம். எல்லாக் கோயில்களிலும் கருவறைக்குமுன் அர்த்தமண்டபம் இருக்கும். சிலவற்றில் மட்டுமே முகமண்டபம் என்ற அர்த்தமண்டபத்துக்கும் கருவறைக்கும் இடைப்பட்ட இடம் இருக்கும்.


கருவறைகள் சிவன், திருமால், பிரம்மன், துர்க்கை, சுப்ரமணியன் ஆகிய தெய்வங்களுக்கானவை. இந்தத் தெய்வங்கள் சில கருவறைகளில் சிலைகளாகப் பின் சுவரில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் எல்லாக் கருவறைகளிலும் அப்படி இல்லை. மரத்தில் செதுக்கப்பட்டோ அல்லது துணியில் வரையப்பட்டு மரச்சட்டத்தில் பொருத்தப்பட்டோ உள்ளே வைக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் அறிஞர்கள். 

சிவனுக்குரிய கருவறைகளில் லிங்கத்தை நட்டு வைப்பதற்கான குழி காணப்படுகிறது. சில கருவறைகளில் லிங்கமும் உள்ளது. ஒவ்வொரு கருவறைக்கும் வெளியே இரு துவாரபாலகர்கள் எனப்படும் வாயில்காப்பாளர்கள் சிற்பங்களைக் காணலாம். பெண் தெய்வமாக (துர்க்கை) இருக்கும்போது வாயில்காப்பாளர்களும் பெண்களாக இருப்பார்கள்.

மாமல்லபுரத்தில் இருக்கும் இரதங்கள்:
  • பஞ்சபாண்டவ இரதம் எனப்படும் ஐந்து இரதங்கள்
  • வலையன்குட்டை இரதம்
  • பிடாரி இரதங்கள் எனப்படும் இரு இரதங்கள்
  • கணேச இரதம்


இந்த ஐந்து இரதங்களும் பஞ்சபாண்டவர்கள் பெயரைப் பெற்றிருந்தாலும் அவை மகாபாரதத்துடன் தொடர்புடையவை அல்ல. மூன்று அடுக்குகளுடன் எட்டுபட்டை சிகரத்தை (திராவிட விமானம்) உடைய தர்மராச இரதம் மற்றும் அருச்சுன இரதம், சாலை (கூண்டு வண்டி) வடிவிலான சிகரத்தை உடைய பீம இரதம், சதுரமான குடிசை போன்ற சிகரத்தை உடைய திரௌபதி இரதம் மற்றும் கஜபிருஷ்டம் (யானையின் பின்பக்கம்) போன்ற சிகரத்தை உடைய சகாதேவ இரதம் ஆகிய இரதங்கள் கோயில் மாதிரிகளுக்காகத் தோற்றுவிக்கப்பட்டவையே என்பதை அவற்றின் ஸ்தூபிகள் பாறையிலிருந்து பிரிக்கப்பட்டு சிகரத்தின் மீது பொருத்தப்படாமல் இருப்பதிலிருந்து அறியலாம்.

சிற்பக்கலை:
பல்லவர்கள் செதுக்கிய சிற்பங்களில் இருந்து அவர்கள் கலைக்கு அளித்த முக்கியத்துவத்தை நாம் அறியலாம்.


இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத புதுமையாக மாமல்லபுரத்தில் உள்ள வெளிப்புறப் புடைப்புச் சிற்பத் தொகுதிகள் விளங்குகின்றன. வெளிப்புறச் சிற்பத் தொகுதிகளாக இங்கு இருப்பவை:

  • அருச்சுனன் தபசு
  • கண்ணன் கோவர்த்தன மலையைத் தூக்குதல் (பிற்காலத்தில் இந்தச் சிற்பத் தொகுதிமீது ஒரு மண்டபம் கட்டப்பட்டது)
  • முற்றுப்பெறாத அருச்சுனன் தபசு
  • விலங்குகள் தொகுதி


இவைதவிர, வராக மண்டபம், ஆதிவராக மண்டபம், மகிஷாசுரமர்த்தினி மண்டபம் ஆகியவற்றுள்ள் சில புடைப்புச் சிற்பத் தொகுதிகள் காணப்படுகின்றன. ராமானுச மண்டபத்தில் உருவாக்கப்பட்ட சில புடைப்புச் சிற்பத் தொகுதிகள் பிற்காலத்தில் மதக் காழ்ப்புணர்ச்சி கொண்டோரால் செதுக்கி அழிக்கப்பட்டிருக்கிறது.

திருவள்ளுவரின் நூல்கள்!!!

நூல்கள்:
1. ஞானவெட்டியான் - 1500
2. திருக்குறள் - 1330
3. ரத்தினசிந்தாமணி - 800
4. பஞ்சரத்தனம் - 500
5. கற்பம் - 300
6. நாதாந்த சாரம் - 100
7. நாதாந்த திறவுகோல - 100
8. வைத்திய சூத்திரம் - 100
9. கற்ப குருநூல் - 50
10. முப்பு சூத்திரம் - 30
11. வாத சூத்திரம் - 16
12. முப்புக்குரு - 11
13. கவுன மணி - 100
14. ஏணி ஏற்றம் - 100
15. குருநூல் - 51

           இவர்கள் அருளிய நூல்கள் இன்னும் பல பெயர் அறியப்படாமல் காலத்தால் அழிந்து விட்டன.

ஒளவையரின் ஆத்திச்சூடி!! உயிர் வருக்கம்!!!

          1. அறம் செய்ய விரும்பு
          2. ஆறுவது சினம்
          3. இயல்வது கரவேல்
          4. ஈவது விலக்கேல்
          5. உடையது விளம்பேல்
          6. ஊக்கமது கைவிடேல்
          7. எண் எழுத்து இகழேல்
          8. ஏற்பது இகழ்ச்சி
          9. ஐயம் இட்டு உண்
          10. ஒப்புரவு ஒழுகு
          11. ஓதுவது ஒழியேல்
          12. ஒளவியம் பேசேல்
          13. அஃகம் சுருக்கேல்
-ஒளவையார்                                           

சூரிய நமஸ்காரத்தின் உன்னதம்!!!

             அதிகாலையில் வெறும் வயிற்றுடன் சூரிய நமஸ்காரம் செய்வது சிறந்தது. உடல் நலம் பெற, இந்த எளிய, ஆயினும் பயனுள்ள, சூரிய வணக்கத் தொகுப்பினைச் செய்யத் துவங்கலாம் வாருங்கள்.
வேதங்களில் ஆரோக்கியமான உடல்நலம் மற்றும் வளமையை உயர்த்துவதற்கு சூரியனை வழிபடும் ஏராளமான மேற்கோள்கள் உள்ளன. இந்த வேதாந்த பாசுர ஏடுகளில் சில (இந்துக்கள் தினசரி செய்யும் வழக்கமான கடமையான) நித்ய விதியுடன் ஒருங்கிணைந்துள்ளது. இந்த தினசரி செயல்பாடுகளானது சூரிய நமஸ்காரம் என வரையறுக்கப்படுகிறது ("சூரிய வணக்கமுறை" எனவும் கூறப்படுகிறது). சூரியனுக்கு உடல்சார் வணக்கமானது கடவுளிடம் முழுமையாக சரணடைவதைக் காட்டுகிறது. இது இந்த செயல்பாடுகளின் முக்கிய பண்பாகும். மண்டலத்திற்கு மண்டலம் இந்த சூரிய நமஸ்காரத்தின் வடிவங்கள் வேறுபடுகின்றன. டுருச்ச கல்ப நமஸ்காரம் மற்றும் ஆதித்ய பிரசனம் இரண்டும் பிரபலமான பயிற்சிகளாகும்.

ஒவ்வொரு சூரிய வணக்கச் சுழற்சியும் இரண்டு தொகுப்புக்களைக் கொண்டது. இந்த 12 யோகா தோற்ற நிலைகளும் சேர்ந்து ஒரு தொகுதியாகின்றன. இரண்டாவது பகுதியினைச் செய்து முடிக்க அதே தோற்ற நிலைகளை மீண்டும் செய்து, (கீழே கொடுக்கப் பட்டுள்ள 4 மற்றும் 9 வது படியில்) வலது காலுக்குப் பதிலாக இடது காலை நகர்த்த வேண்டும். சூரிய நமஸ்காரத்தினைச் செய்வதில் நீங்கள் பல்வேறு காட்சி விளக்கங்களைக் கண்டிருக்கலாம். ஆயினும், ஒரு குறிப்பிட்ட வரிசையைப் பின்பற்றி சீராகப் பயிற்சி செய்தல் சிறந்ததாகும்.
உடல்நலனைப் பெறுவதைத் தவிர, சூரிய நமஸ்கார் இந்தப் பூமியிலுள்ள உயிர்களை வாழவைக்கும் சூரியனுக்கு நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள ஒரு வாய்ப்பும் ஆகும். அடுத்த பத்து நாட்களுக்கு ஒவ்வொரு நாளையும் சூரிய சக்திக்கு கருணை மற்றும் நன்றியுணர்வுடன் துவங்குங்கள். 12 சுற்றுக்கள் சூரிய நமஸ்காரம் செய்து, அதன் பின்,பிற யோகப் பயிற்சிகளைச் செய்து, பின்னர் யோகநித்ராவில் ஆழ்ந்த ஓய்வெடுங்கள். உடல் ஆரோக்கியத்திற்கும், மகிழ்ச்சி மற்றும் அமைதிக்கு இது ஒரு தாரக மந்திரமாக விளங்குவதைக் காண்பீர்கள். இந்த விளைவுகள் நாள் முழுவதும் நீடித்திருப்பதையும் உணர்வீர்கள்.

சூரிய நமஸ்காரம் செய்வது எப்படி?
எதாவது ஒரு விரிப்பின் மீது சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். பின் வருமாறு செய்ய துவங்குங்கள். மேலே உள்ள படத்தை பார்த்து எடுத்துக் காட்டாய் கொள்ளுங்கள். 

1.பிராணமாசனம்(இறைவணக்கம்)

 உங்கள் கால்களை ஒன்றாக வைத்து , இரு பாதங்களும் உங்கள் எடையை சமநிலையில் தாங்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மார்பை விரித்து, உங்கள் தோள்களைத் தளர்த்திக் கொள்ளுங்கள். மூச்சை உள்ளிழுக்கும் போது, இரு கைகளையும் பக்கவாட்டிலிருந்து உயர்த்துங்கள்.மூச்சை வெளிவிடும்போது உள்ளங்கைகள் இரண்டினையும் மார்புக்கேதிரே வணங்கும் நிலையில் எடுத்து வாருங்கள்.

2.அஸ்ட உட்டனாசனம்(உயர்த்தப்பட்ட கைளுடன் தோற்றம்)

மூச்சை உள்ளிழுத்தபடி,மேற் கைகளின் உட்புறத் தசை காதுகளுக்கருகாமையில் இருக்கும்படி இரு கைகளையும் மேலே உயர்த்துங்கள். இந்தத் தோற்றத்தில், பாதங்கள் முதல் கைவிரல்கள் வரையில் உடல் முழுவதையும் மேல்நோக்கி இழுக்கும்வகையில் முயற்சி செய்யப் பட வேண்டும்.இடுப்பை சற்றே முன்புறமாகத் தள்ளிக் கொள்ளலாம்.பின்புறமாக வளைவதை விட, கை விரல்கள் வரையில் மேல்நோக்கி எழும்புவதையே உறுதி செய்து கொள்ளுங்கள்.

3.அஸ்டபாதாசனம்(முன்னோக்கிய நிலையின் குனிந்தவாறு தோற்றம்)

மூச்சை வெளியே விட்ட படி, இடுப்பிலிருந்து மெதுவாகக் குனியுங்கள், முதுகெலும்பு நிமிர்ந்தே இருக்கட்டும்.முழுவதுமாக மூச்சை விட்டபின்னர்,இரு கைகளையும் தரையில் பாதங்களுக்கருகில் கொண்டு வாருங்கள்.
 உள்ளங்கைகளைத் தரையில் வைக்கத் தேவையானால் உங்கள் முட்டிகளை வளைக்கலாம். பிறகு மெதுவாக முயற்சி செய்து,முட்டிகளை நேராக்குங்கள். இந்த வரிசையை முடிக்கும் வரையில் இதே நிலையில் கைகளைத் தரையிலேயே நிலையாக வைத்திருப்பது நல்ல யோசனையாகும்.

4.ஏகபாதபிரஸர்நாசனம் (குதிரைச் சவாரித் தோற்றம்)

மூச்சை உள்ளிழுத்தபடி, உங்களுடைய வலது காலை பின்புறமாகத் முடிந்தவரையில் தள்ளுங்கள். வலது முட்டியை தரையில் ஊன்றி மேலே பாருங்கள்.இடது பாதம் இரு உள்ளங்கைகளுக்கும் இடையே மிகச் சரியாக நிலைகொண்டிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

5.தந்தாசனம்(நான்கு கரங்கள் உள்ள பணியாளர்  தோற்றம்)

மூச்சை உள்ளே இழுக்கும்போதே இடது காலை பின்னோக்கி வைத்து, உடல் முழுவதையும் ஒரு நேர்கோட்டில் கொண்டு வாருங்கள்.உங்கள் கைகளை செங்குத்தாகத் தரையில் வையுங்கள்.

6.அஷ்டாங்க நமஸ்காரா(எட்டு கரங்களுடைய வணக்கம்)

மெதுவாக உங்களது முட்டிகளை தரையில் கொண்டு வந்து மூச்சை வெளியே விடுங்கள். இடுப்பினை சிறிது பின்னால் நகர்த்தி, முன்புறமாகச் சரிந்து, உங்கள் மார்பு,மற்றும் முகவாய் இவற்றைத் தரையில் வையுங்கள். பின்புறத்தைச் சற்றே தூக்குங்கள்.
இடது பாதம் இரு உள்ளங்கைகளுக்கும் இடையே மிகச் சரியாக நிலைகொண்டிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

7.புஜங்காசனம்(நல்ல பாம்புத் தோற்றம்)

முன்னோக்கி நகர்ந்து, மார்பினைச் சற்று உயர்த்துங்கள் உங்களுடைய முழங்கைகளை வளைத்துக் கொள்ளலாம்.தோள்கள் காதுகளிலிருந்து விலகி இருக்கட்டும்.மேலே பாருங்கள்.
மூச்சை உள்ளிழுக்கும்போது மிக மெதுவாக மார்பை முன்னோக்கி தள்ளுங்கள்.மூச்சை வெளிவிடும்போது,தொப்புளை கீழே தள்ளுங்கள்.கால் விரலை அடியில் சேர்த்து விடுங்கள். உங்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு நீட்சி செய்யவும் ; கட்டாயப்படுத்த வேண்டாம்.

8.அதோ முக்கா ஸ்வானாசனம்கீழ்முகம் பார்க்கும் நாய்)

மூச்சை வெளியே விட்டபடியே இடுப்பினையும் முதுகு வால் எலும்பினையும் உயர்த்துங்கள், மார்பு கீழ்நோக்கி, தலை கீழான வடிவத்தில் இத்தோற்றம் இருக்கட்டும்.
முடிந்தால், குதிகால்களை தரையில் பதித்து, முதுகு வால் எலும்பினை மென்மையான முயற்சியின் மூலம் தூக்குங்கள்.

9.ஆஷ்வா சஞ்ச்சலனாசனம் (குதிரையேற்றத் தோற்றம்)

மூச்சை உள்ளிழுத்தபடி, உங்களுடைய வலது காலை முன்புறமாக இரு கைகளுக்கிடையே முடிந்தவரையில் தள்ளுங்கள். இடது முட்டியை தரையில் ஊன்றி மேலே பாருங்கள்.
வலது பாதம் இரு உள்ளங்கைகளுக்கும் இடையே மிகச் சரியாக நிலைகொண்டிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இந்த நிலையில், மெதுவாக இடுப்பினை தரையை நோக்கித் தள்ளுங்கள்.
10.உட்டனாசனம் ( முன்புறம் வளைந்து குனிந்தவாறு போஸ்)
மூச்சை வெளியே விட்ட படி, இடது காலை முன்னாள் எடுத்து வாருங்கள். உள்ளங்கைகள் தரையிலேயே இருக்கட்டும். தேவையானால் முட்டிகளை வளைத்துக் கொள்ளலாம்.

11.அஸ்ட உட்டனாசனம் (கைகள் உயர்த்திய தோற்றம்)

மூச்சை உள்ளிழுத்தபடி,பின்னால் சற்றே வளைத்து, இடுப்பினை வெளிப்புறமாகத் தள்ளியபடியே முதுகினையும் கைகளையும் மேலே உயர்த்துங்கள்.
உங்களது கைகளின் உட்புறத் தசைகள் உங்கள் காதுகளுக்கு அருகில் இருக்கட்டும்.பின்னால் வழிவதை விட மேல்நோக்கி உயர்வதே முக்கியம்.

12.பிராணமாசனம்(இறைவணக்கம்)

மூச்சை வெளியே விடும்போது, உங்கள் உடலை நேராக்கிக் கொள்ளுங்கள். பின்னர், கைகளைக் கீழே விடுங்கள்.இந்த நிலையில் இளைப்பாறுங்கள். உங்கள் உடலில் ஏற்படும் உணர்வுகளைக் கவனியுங்கள்.


சூரிய நமஸ்காரத்தின் அற்புதங்கள்!!!

  1. இதயத்தை முடுக்கிவிட்டு இரத்த ஒட்டத்தை வேகப்படுத்தி உடலின் ஆரோக்கியத்தை நிலைநாட்டுவதில் சூரிய நமஸ்காரம் சிறந்த இடம் பெறுகின்றது. இது இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும். இதயத் துடிப்பைச் சமன் செய்யும். கை, கால் போன்ற தூரவெளி உறுப்புகளுக்குச் சூடு கொடுத்துக் காக்கும்.
  2. சூரிய நமஸ்காரம் ஜீரண மண்டலத்திற்கு உயிரூட்டி ஆற்றலை அளிக்கின்றது. கல்லீரல், வயிறு, மண்ணீரல், குடல்கள் எல்லாம் கசக்கி கசக்கிப் பிடித்து விடுவது போன்று மசாஜ் செய்யப்படுகின்றன.
  3. மலச்சிக்கல் பிரச்சனை சரியாகிவிடுகிறது.
  4. பசியின்மை பறந்தோடுகின்றன.
  5. சூரிய நமஸ்காரத்தில் உடல் அசைவுகளும் மூச்சு ஒட்டமும் இணக்கமாக நடைபெறுகின்றன. நுரையீரல்களில் காற்றோட்டம் தாராளமாகின்றது. இரத்தம் உயிர்க்காற்றால் நலம் பெறுகின்றது. ஏராளமான கரிசக்காற்றையும் பிற நச்சுப் பொருள்களையும் மூச்சு மண்டலத்திலிருந்து வெளியேற்றுவதன் மூலம் சூரிய நமஸ்காரம் உடலுக்குப் பெரும் நன்மை விளைவிக்கின்றது.
  6. சிம்பதட்டிக், பாராசிம்பதட்டிக் நரம்புகளின் செயல்களை நெறிப்படுத்துவதன் மூலம் நல்ல ஒய்வுக்கும் உறக்கத்திற்கும் உதவுகின்றது. இதனால் நினைவாற்றல் அதிகரிக்கின்றது.
  7. பிற உயிரணுக்களைக் காட்டிலும் நரம்பு உயிரணுக்கள் மிக மிக தாமதமாகவே விழிப்புற்று உயிராற்றல் பெறுகின்றன. இருப்பினும் இடையறாத முறையான பயிற்சியாலும் சலிக்காத முயற்சியாலும் சிறுகச் சிறுக நரம்பு உயிரணுக்கள் தத்தம் சாதாரணக் காரியங்களைச் செய்யத்தக்க அளவில் வலுவடைகின்றன.
  8. சூரிய நமஸ்காரத்தில் கழுத்து முன் பின் வளைகின்றது. இதனால் தைராயிட், பாராதைராயிட் சுரப்பிகளுக்கு இரத்தம் கிடைக்கின்றது. அவை செயல்படுவதனால் எல்லா எண்டோக்கிரைன் சுரப்பிகளும் தமக்குரிய இயல்பான காரியங்களைச் செய்கின்றன.
  9. தோல் புத்துணர்வு பெற்றுப் பொலிவடைகின்றது. சூரிய நமஸ்காரத்தை முறைப்படி செய்யும் போது வியர்வை உண்டாகும். ஏராளமாக உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் தோலின் வழியே வெளியேறும். நன்றாக வியர்க்கும் வரை இப்பயிற்சி செய்வது நல்லதென சூரிய நமஸ்காரத்தைப் பிரபலப்படுத்திய அவுண்ட் அரசர் கூறுகின்றார். வியர்வை பத்துப் பதினைந்து நிமிடங்களிலேயே வெளிவருவதை அனுபவத்தில் அறியலாம். தோலின் மூலம் வியர்வை வெளிவரும் அளவுக்கு உடல்நலம் ஓங்கும்.
  10. சூரிய நமஸ்காரத்தில் உடலில் உள்ள தசைகள் அனைத்தும் வலுவடைகின்றன. குறிப்பாக கழுத்து, தோள், கை, மணிக்கட்டு, வயிற்றுச்சுவர், தொடை, கெண்டைக்கால், கணுக்கால் முதலிய பகுதிகளில் தசைகள் பயிற்சியால் உரம் பெறுகின்றன.
  11. கொழுப்பால் வயிறு, தொடை, இடுப்பு, கழுத்து, நாடி முதலிய இடங்களில் உண்டாகும் மடிப்புகள் மறையும்.
  12. தோல், நுரையீரல், குடல், சிறுநீரகம் முதலிய பகுதிகள் வழியே சரியாக மலம் (கழிவுப் பொருட்கள்) வெளியேறுவதால் உடலில் விரும்பத் தகாத துர்நாற்றம் ஏற்படுவதில்லை.
  13. சூரிய நமஸ்காரத்தில் உடல் சரியான அளவில் அமையப் பெறுவதால் அது எந்த விளையாட்டுப் பயிற்சி வேலைகளுக்கும் எப்போதும் தயார் நிலையில் இருக்கும். இளமை, நலம், அழகு மூன்றும் ஒருங்கே அமைந்து உடலுக்கும் உயிருக்கும் அழியா இன்பத்தைக் கொடுக்க வல்லது.